Saturday, December 25, 2010

பேரவலம்

ஒரு கொசுவும் ஒரு ராக்ஷச பக்ஷியும்

தன் ஒரு வயிறுக்கு மட்டும்
கேட்கிறது அந்த சிறு உயிரு,
குடம் குடமாய்ப் பருக வேண்டுமாம்
அந்த ராக்ஷச பக்ஷிக்கு.

தன் இனத்தைக் காக்க வேண்டும்

அந்த சிற்றுயிருக்கு --
ராக்ஷச பக்ஷிக்கோ --
ஒரு இனம் அழிய வேண்டும்.

கொசுவை ஒழிப்பதில் காட்டும்

தீவிரத்தைக் கூட
நாம்
காட்டவில்லையே
நம் இனத்தைக் காப்பதில்.


வார்ப்பு கவிதையிதழில் வெளிவந்தது. [http://www.vaarppu.com/padam_varikal.php?id=36]

No comments:

Post a Comment