Saturday, May 10, 2025

மே கவிதைகள் 1

 

முட்டை உடைந்து வெளியேறிய

இடம் பொருள் 

உன் நினைவில் உள்ளதன் 

மறைநிலை 

நீ வாழும் ஆழ்கடலில் கண்டால்

சிற்றாமைப் பெண்ணே! 

ஆங்கே ---

முன்முகஐவர் வழி 

வன்புகையோ காட்சியோ குடியோ தீயுணவோ

மடல்கொண்ட இரண்டினால், ஓட்டினுள்காண் ஒன்றினால்

எண்ணற்ற கீழ்மொழியோ 

எண்ணமோ

கண்டது கடையது எனப் பலப்பல 

இட்டும் 

சிலர் நெடுநாளும் --- 

நன்மையே உண்டும் அகத்தீடு கொண்டும் 

பிறர் போற்ற வாழ்ந்தும் 

சிலர் 

புற்றினாலும் உள்ளகம் நின்றும் 

    பன்னோய்களாலும் இடர்வினாலும் 

சில காலமே 

வாழ்வதன் காரணம் ---

முன்னோர் ஆசியா பெற்றோர் தவமா

இறையருளா 

ஓடுநீர் உள்ளுறை மரபணுவா 

வெறும் நல்வாய்ப்பா

என்னவென்று தேடிக் கண்டு

பின்னாள் முட்டை வைக்க 

வருந்தருணம் இதேயிடத்தில்

கூறிவிடு 

என்னைப் பாட்டன் என்பானிடம். 



No comments:

Post a Comment