விடியல் அமைதி கலைய
ஏஐ-யை எள்ளி நகையாட -- பல்லி
ஒன்று சொடக்கு போட்டது.
TN-specific blog for school students for Physics, for teachers on Education, for amateur birdwatchers and Tamil Haiku
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
நம் பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு இயல்பூக்கம் முன்னோர் வாசத்தால் (2 முறை)
ஐம்புலன்கண் நுழைவோரை உள்ளுக்குள் சுரப்போரை/
உள்ளுக்குள் இருப்போரை/ வாழ்வியல் முடிவுகளை (2 முறை)
இக்கண சமயத்தே முழுமையாய் நோக்கி (2 முறை)
உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு! (2 முறை)
இயற்கைப் பேரறிவால் சான்றோர் ஞானத்தால் (2 முறை)
உந்தன் சித்தத்தால்/ அந்தக்கரணத்தால் முழுமையாய் நோக்கி (2 முறை)
நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு (2 முறை)
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
இன்னபிற காலத்தே நமையாளும் அவயவம் போற்றி
செய்யற்குகா செயாது செயற்கரிய செய்வித்து
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
1.
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
உன் பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு இயல்பூக்கம் முன்னோர் வாசத்தால் (2 முறை)
ஐம்புலன்கண் நுழைவோரை உள்ளுக்குள் சுரப்போரை (2 முறை)
இக்கண சமயத்தே முழுமையாய் நோக்கி (2 முறை)
உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு! (2 முறை)
இயற்கைப் பேரறிவால் சான்றோர் ஞானத்தால் (2 முறை)
உந்தன் சித்தத்தால் முழுமையாய் நோக்கி (2 முறை)
நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு (2 முறை)
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
இன்னபிற காலத்தே நமையாளும் அவயவம் போற்றி
செய்யற்குகா செயாது செயற்கரிய செய்வித்து
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
பனிதேசத்து சிறுபுள்
புழுக்களையுண்ணும் புதருக்குள்
வல்லூறின் புழுக்கை.
(A Booted Warbler was feeding in a dried bush; a Shikra tried to attack it)
எட்டப் பறக்கும் தட்டானைத் தட்டிப் பிடிக்கும்
செம்மஞ்சள் கழுத்தைத் திருப்பியபடி குரல் எழுப்பும்.
அது என்ன பறவை?
1.
நான் கவிதை எழுத
(என்) உட்கருவித் துளிமங்கள்
அலையாய் பாய்கின்றன.
2.
தரையில் அலை பாயும்
சூரியன்கள் அழிந்தன
மேகத்தால்
ஷிகி!
மிகானின் சுவைகூட மாறும்
உன் வரிகளின் உண்மை
அண்டம் உள்ள வரை.
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
உன் பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு இயல்பூக்கம் முன்னோர் வாசத்தால் (2 முறை)
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
ஐம்புலன்கண் நுழைவோரை உள்ளுக்குள் சுரப்போரை (2 முறை)
அக்கண சமயத்தே முழுமையாய் நோக்கி (2 முறை)
உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு! (2 முறை)
ஆடாதே பாம்பே! நீ ஆடாதே பாம்பே! (2 முறை)
இயற்கைப் பேரறிவால் சான்றோர் ஞானத்தால் (2 முறை)
உந்தன் சித்தத்தால் முழுமையாய் நோக்கி (2 முறை)
நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)
1. போத்தல் தீவு --- டயரின் மேல்
அமர்ந்தது உண்ணிக் கொக்கு
நடுக் கூவத்தில்.
2. மேகத்தின் வலசை
கதிர்குருவி நிசப்தமானது
நிசப்தத்தின் ஓசை
மழை விலகியது.
1. I don't aspire to do any great thing lest I damage everything
2. Even saying NO seems easier than accepting I DON'T KNOW
3. புல்லறிவோன் தாமறியான் அஃதறியுந் தருணம்
நல்லறிவோன் எனும் உலகு.
இயல்பூக்கம் பட்டறிவு கேட்டறிவினால்
முன்னோர் வாசத்தால் பயனேதும்இல்லை
ஐம்புலன்கண் மனத்துக்கண் நுழைவோரை
அக்கண சமயத்தே
முக்காலத்திற்கும் முழுமையாய் நோக்கி
சான்றோர் ஞானத்தால்
இயற்கைப் பேரறிவால் உன் சித்தத்தால்
உந்தப்பட்டு ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
இன்னபிற காலத்தே நமையாளும்
அவயவம் போற்றி
செய்யற்குகா செயாது
செயற்கரிய செய்வித்து
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
புலனைந்து வழி நுழையுஞ் சமயம்
நான் பட்ட, கேட்ட அறிவினால்
முன்னோர் வாசம், சான்றோர் ஞானத்தால்
இயற்கைப் பேரறிவின்பால்
முக்காலத்திற்கும் முழுதாய் அவதானித்து
அக்கணம் அந்நிலையை
சந்திக்கச் செய்வாயே, உள்ளுணர்வே!
நடுநிசியில் விழித்து புரண்டு புரண்டு படுத்து,
நீண்ட நேரமாக கவிதை எழுத யோசனை ---
கை கால் எட்டாத இடங்களில் எல்லாம்
ஆழ்ந்த பதிவுகளைச் செய்தது கொசு.
உறக்கம் வரவில்லை, கவிதை?