Sunday, August 31, 2025

August 2025

 1.    I don't aspire to do any great thing lest I damage everything


2.     Even saying NO seems easier than accepting I DON'T KNOW


3.     புல்லறிவோன் தாமறியான் அஃதறியுந் தருணம்

        நல்லறிவோன் எனும் உலகு.

Wednesday, August 27, 2025

ஆகத்து 2025 எண்ண அகவல்

புலனைந்து வழி நுழையுஞ் சமயம் 

          நான் பட்ட, கேட்ட அறிவினால் 

முன்னோர் வாசம், சான்றோர் ஞானத்தால்

          இயற்கைப் பேரறிவின்பால் 

முக்காலத்திற்கும் முழுதாய் அவதானித்து 

           அக்கணம் அந்நிலையை

சந்திக்கச் செய்வாயே, உள்ளுணர்வே!


                            இயனறிவு பட்டறிவு கேட்டறிவினால் 

                            முன்னோர் வாசத்தால் பயனேதுமில்

                            ஐம்புலன்கண் நுழைமின் அதை

                            அக்கண சமயம்

                            முக்காலத்திற்கும் முழுமையாய் நோக்கி

                            சான்றோர் ஞானத்தால் இயற்கைப் பேரறிவால்

                           உந்தப்பட்டு ஆடுவாய் உள்ளுணர்வே!


                            இன்னபிற காலத்தே நமையாளும் 

                            அவயவம் போற்றி 

                            செய்யற்குகா செயாது 

                            செயற்கரிய செய்விப்பாய் அடிமனமே!


Saturday, June 28, 2025

சூன் 2025 கவிதைகள்

நடுநிசியில் விழித்து  புரண்டு புரண்டு படுத்து,  

              நீண்ட நேரமாக கவிதை எழுத யோசனை ---  


கை கால் எட்டாத இடங்களில் எல்லாம்

            ஆழ்ந்த பதிவுகளைச் செய்தது கொசு.


உறக்கம் வரவில்லை,   கவிதை? 

Wednesday, May 14, 2025

மே கவிதைகள் 2

<https://www.fpa2photoaward.org/en/2025-edition/photos/humanity-versus-nature/lakshitha-karunarathna/camouflaged-in-the-garbage-dump-00000167>

In no less significance, we'd seen our very own cattle on top of dumpyards! A haiku capturing this:

முழு நிலவு

மேடுவலம் ஏறி உச்சியில்

          நின்ற எறுமை கிளறியது ---

பால் உறைகளை.


Saturday, May 10, 2025

மே கவிதைகள் 1

 

முட்டை உடைந்து வெளியேறிய

இடம் பொருள் 

உன் நினைவில் உள்ளதன் 

மறைநிலை 

நீ வாழும் ஆழ்கடலில் கண்டால்

சிற்றாமைப் பெண்ணே! 

ஆங்கே ---

முன்முகஐவர் வழி 

வன்புகையோ காட்சியோ குடியோ தீயுணவோ

மடல்கொண்ட இரண்டினால், ஓட்டினுள்காண் ஒன்றினால்

எண்ணற்ற கீழ்மொழியோ 

எண்ணமோ

கண்டது கடையது எனப் பலப்பல 

இட்டும் 

சிலர் நெடுநாளும் --- 

நன்மையே உண்டும் அகத்தீடு கொண்டும் 

பிறர் போற்ற வாழ்ந்தும் 

சிலர் 

புற்றினாலும் உள்ளகம் நின்றும் 

    பன்னோய்களாலும் இடர்வினாலும் 

சில காலமே 

வாழ்வதன் காரணம் ---

முன்னோர் ஆசியா பெற்றோர் தவமா

இறையருளா 

ஓடுநீர் உள்ளுறை மரபணுவா 

வெறும் நல்வாய்ப்பா

என்னவென்று தேடிக் கண்டு

பின்னாள் முட்டை வைக்க 

வருந்தருணம் இதேயிடத்தில்

கூறிவிடு 

என்னைப் பாட்டன் என்பானிடம். 



Sunday, April 13, 2025

2025 ஏப்ரல் கவிதைகள்

கதிர்குருவி சென்று விட்டது

வேலிப்புதரில் வளரப் போகும்

கற்காரை


கவிதை வரவில்லை இயற்கையாக

முகத்தை மட்டும் விட்டுவிட்டு 

    முழு உடலையும் போர்த்தியும்

ரீங்காரமிட்டுக் கடிக்கும் உன்னை!

    களிம்பு தடவிப் படுத்தாலும்

ஏற்கனவே செய்த சம்பவம்

    சொரியச் சொரிய

தூக்கமும் வரவில்லை.

Thursday, March 27, 2025

2025 மார்ச்சு

 

என்னவொரு வாசம்!


வேப்பம் பூவைப் பறித்து ரசம் வைத்தால் 

நன்றாக இருக்கும்.


எட்ட உள்ளதே! ஏறிடலாமா?

விழுந்து விட்டால்? 

உதிர்ந்த பின் பெருக்கிக் கொள்வோம். ஆனால் --

இப்போதே எடுத்தால் 

மலர்ச்சியுடன் இருக்குமே!


காற்றில் கொத்தாய் அவை ஆடும்போது 

கொள்ளை அழகு!


அருகில் 

நடனமாடிய இரு தேனீக்கள் 

பூவைச் சுற்றிப் போயின.


கீழே விழட்டும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.






Thursday, March 13, 2025

2025 மார்ச்சு கவிதை

1.      துரோகம் தீர்த்தல்                                            2.      தூய சொத்து

மரத்தின் கீழ்                                                                            ஓயாத ஓசையும் வெண்ணலையும்

மஞ்சள் நிழலாய் வீழும்                                                                        அடையும் ஆற்றங் கரையில்

கூர்மணம் அடிக்கும் ஒரு                                                                      முகில் நோக்கி ஓடும் மீன் பார்க்க

கொன்றைப் பூவிலிருந்து இன்னொன்று                                       எனைக் கண்ட நீயும் நின் மகவும்

மீண்டும் இன்னொன்று எனத்                                                             நாய்களும் பேய்களும் உண்டதுபோக

தாவிடும்                                                                                                       கூம்புக்குழியில் நானிட்ட நூற்றில்

தேனியைப் பார்த்திருந்தேன்.                                                            கடல்மீள் குஞ்சுகள்


எனக்கில்லை எனில் வேறு                                                                 சூட்டாலும்கூட இனம் மாறும் எனில்

யார்க்கும் கூடாது --                                                                                விருப்பத்தால் (உன்) இனம் மாறிட்டால்

கூடவே கூடாது.                                                                                        தூய்மை கெட்டிடுமோ

கத்தியோ அமிலமோ வேறு எதுவோ                                            உயிர்ப்பலி கேட்டிடுமோ? (space)

எது சரியோ அது.                                                                                    இரவைப் பகலாக்கும் மாடமோ

என் தலை வெடிக்க நாளம் முறுக்கேற                                        மாளிகையோ

தாவிடும்                                                                                                    சீறிப்பாயும் சிவிங்கி போன்ற உந்தோ

தேனியைப் பார்த்திருந்தேன்.                                                        பன்னூறு கோடிகளோ, அதை விடவும்


சுவிட்டெனப் பாய்ந்தது                                                                    புங்கம் பூவுதிரும் இதே காலத்தில்

வேதிவால் குருவியொன்று --                                                          சில நூறு ஆண்டிற்பின்

அதே காலம் அதே மரம்                                                                    என் இனத்தை உன் இனம்

மீண்டும் தாவிடும்                                                                                இதே இடத்தில் இதேபோல்

தேனியை                                                                                                 சந்தித்தலே

நீண்டவால் ஆட                                                                                     எழு தலைமுறை சொத்தாம். 

கொத்திச் செல்வதைப் பார்த்திருந்தேன்.


கத்தியின்றி அமிலமின்றி 

நீதி வழங்கிய தேவதையை.  

Saturday, February 22, 2025

2025 பிப்ரவரி கவிதை

  1.

             விண்ணில் வழி கண்டு 

நீரில் கூடும் வரித்தலை வாத்தே!

                    நீயறிந்த பாதைதனில்

        தனையறியுந் தந்திரங் காணா(து) 

தரணியாளுந் தகுதியுடை

                    மாந்தர் உளரோ!

2.

   தோல்குருவீ!

    ஆட்டத்தில் இழந்து 

    விலையாக உயிர் தரத் துடிக்கும் 


    குழியில் வீழ்ந்த 

     (இவ்) எறும்பைக் காத்திட 

     வழி ஏதேனும் 


     முக்கடல் தாவி மும்மாதம் கடந்து 

     நீ வந்த பாதைதனில் 

     உளதா என


     பரந்த இவ்வேரிக் கரையில்

     தன் கன்றைக் காக்க 

     முறைத்து நிற்கும் எருமைகளிட்ட சாணம் 

     கால்படுமுன் கூறிவிடு.

     

ஜன்னல் கம்பிகள்

10 செமீ நடுவில் எத்தனை பகுவல்கள்

சிலந்தி வலை


கம்பிளி பத்தவில்லை ஜனவரி இரவுகள்

முழு வேகத்தில் மின்விசிறி 

பிப்ரவரி 3






Monday, February 3, 2025